Monday, September 24, 2007

Congratulations India & Well done Pakistan





வெல் டன் இந்தியா.....முதல்ல இருந்து கடைசி வரைக்கும் Real Entertainment and Thrill...Congratulations India.

C'mon India......



Yes Pakistan C,mon, We Are Ready





All the Best India, We Are With You to Enjoy the Game

Thursday, September 20, 2007

Woow Six Raj






Friday, August 31, 2007

Reuters ல இருந்து பெஸ்ட் ஃபோட்டோஸ்

Reuters ல இருந்து பெஸ்ட் ஃபோட்டோஸ்



































Tuesday, August 7, 2007

இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுக்குறோம் -


அடுத்த மாசம் சவுத் ஆபிரிக்காவுல நடக்கும் 20 / 20 உலகக் கோப்பைக்கு தோனிய கேப்டனா போட்டு இருக்காங்க. யுவராஜ் வைஸ் கேப்டன்.

20/20 உலகக் கோப்பைக்கும், இங்கிலாந்துல நடக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கும் பிசிசிஐ டீம் அறிவிச்சுட்டாங்க.

பதானோட அண்ணன், ஆல் ரவுன்டர் யூசுஃப் பதானும் 20/20 டீம்ல இருக்கார்.

20/20 டீம்ல நம்ம பெரிய அண்ணன்கள் யாரும் இல்லை. அவங்க சொல்லி இருக்காங்க..புதுசா வர்ர வீரர்களுக்கு இடம் குடுக்குறோம் னு....

பெரிய அண்ணன்ஸ்..உங்க கிட்ட ஒரு question....இந்த வசனத்த ரெகுலர் மேட்ச அப்போ சொல்லுவீங்களா?..:-)))

Indian squad for Twenty20 World Cup: Mahendra Singh Dhoni (capt, wk), Yuvraj Singh (Vice-capt), Virender Sehwag, Harbhajan Singh, Ajit Agarkar, Dinesh Karthik (standby wk), Gautam Gambhir, Robin Uthappa, Joginder Sharma, Yusuf Pathan, Piyush Chawla,
S Sreesanth, Irfan Pathan, Rudra Pratap Singh and Rohit Sharma.

Indian squad for seven ODIs against England: Rahul Dravid (capt), Mahendra Singh Dhoni (Vice-capt, wk), Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh, Ramesh Powar, Dinesh Karthik (standby wk), Zaheer Khan, Munaf Patel, Piyush Chawla, Rudra Pratap Singh, Rohit Sharma, Robin Uthappa, Gautam Gambhir and Ajit Agarkar.

Saturday, May 26, 2007

கீப் திஸ் கோயிங் இந்தியா..




பேட்டிங்களேயும் பவுளிங்க்ளேயும் இந்தியா இனைக்கு அட்டகாசமா ஆடிட்டாங்க.

சச்சின் ஓட ரெக்கார்ட், ஜாகீர் கானின் ஃபேஸ்..ரெண்டும் சூப்பர்.

ஜாகிர் இனைக்கு அருமையா போட்டார். முதல் பந்திலேயே விக்கெட், ஜாவட் ஓமர், தர்ட் ஸ்லிப்ல கேட்ச் குடுத்து. (58-5)

ரெண்டாவது ஓவர்ல ருத்ர பிரதாப் சிங் பங்களாதேஷ் கேப்டன அனுப்பினார்.

Four century-makers for India

டென் டுல்கர் - 122 நாட் அவுட்

வாஸிம் ஜாஃவர் -138

தினேஷ் கார்த்திக்-129

திராவிட்-129.

Wednesday, May 23, 2007

தமிழ்மணம் Vs World XI- Part-1


First time in the History of the game. Tamil bloggers are playing World XI at India Gate Lawn, New Delhi.

முதல்ல டீம் செலக்ஷன்.

யார எடுக்க யார விடன்னு ஒரே கன்ப்யூஷன். என்னையும் அபி பாப்பாவையும் உட்கார்ந்து டீம் செலக்ட் பண்ண சொன்னாங்க. அபி பாப்பாவ அனுப்பி வைக்க சொன்னது கண்மணி அக்காவும் மைபிரெண்டு அக்காவும்.

எனக்கு ஒரே குஷி, ஹை..அபிபாப்பா வரப்போகுதுன்னு. ஃபாஸ்ட் பவுளர் அண்ணா 'அவந்தி ரொம்ப சந்தோஷப் படாதே பாப்பாவ சமாளிச்சதுக்கு அப்புறம் இத சொல்லுன்னு" ஃபோனல் சொன்னார். இவருக்கு பொறாமைனு நினச்சுட்டு சரி சரி நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டேன்.

பாப்பாவ போய் ஏர்போர்ட்ல கூப்டுட்டு வீட்டுக்கு வந்தேன். டிரைவர் ஒரு சிங்

ஏய் அவந்தி 'என்ன டிரைவர் ஏற்பாடு பண்ணி இருக்கே?...குடுமி டிரைவர்..

பாப்பா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அவங்க மதத்துல அப்படி தான்..

அது எல்லாம் முடியாது என் குடிமி விட அவன் குடிமி பெருசா இருக்கு. நான் ஏற மாட்டேன் வேற கார் ஏற்பாடு பண்ணுன்னு ரோட்ல உட்கார்ந்துட்டா.

ஆஹா ஆரம்பிச்சுறுச்சுட்டா போலன்னு பயம் வந்துறுச்சு. சர்தாஜிக்கிட்ட பேசி அனுப்பீட்டு வேற கார் ஏற்பாடு பண்ணேன். ஏசி இருக்கான்னு கேட்டா. எல்லாம் இருக்கு ஏறு பாப்பா...பூச்சாண்டி வந்துறுவான்னு பயமுறுத்தினேன்

ஏய் அவந்தி என்ன உங்க காலம் மாதிரி பூச்சாண்டிக்கு பயந்துக்குவோம்னு நினச்சியா. அந்த பூச்சாண்டிகே அல்வா குடுத்தவங்க நாங்க தெரியுமா?..

சரி சரி ஏறு பாப்பா ன்னு கெஞ்சி ஏற வச்சேன்.

பங்காளி அண்ணா, தென்றல் அண்ணா, எல்லாரும் அவங்களை நியாபகத்துல வச்சுக்கு சொல்லி போன்ல வாழ்த்து சொன்னாங்க. பாப்பா கிட்ட பேசனும்னு சொன்னாங்க. ஆனா பாப்பா I am very tired...டீம் செலக்ஷனுக்கு முன்னாடி யாரு கிட்டேயும் பேச மாட்டேன்.. நீயும் பேச கூடாதுன்னு சொல்லி போன பிடிங்கி வச்சிட்டா.


முதல் நாள் அபி பாப்பா ' ஏய் அவந்தி என்ன இது, இது மாதிரி இடத்துல உட்கார்ந்தா டீம் செலக்ட் பண்ணுவாங்க?. எனக்கு இப்படி எல்லாம் இருந்தா மூளை வேலை செய்யாது. (இருந்தாலும்..ஹ்ம்ம்ம்) கேஷ்மீர், சிம்லா கூப்டுட்டு போய், அந்த கிளைமெட்ல இருந்தாதான் நான் செலக்ட் பண்ணுவேன்" அப்படீன்னு ஒரே அடம்.

நான்- ப்ளீஸ் பாப்பா, இந்த தடவை அடஜ்ஸ் பண்ணிக்கோ, அடுத்த தடவை நம்ம Switzerland போலாம்.

பாப்பா- அடுத்த தடவை எங்க போறதுன்னு நீ என்ன சொல்றது. அது எல்லாம் முடியாது. என் ரேன்ஞ்சுக்கு நான் இந்த மாதிரி டீம் எல்லாம் செலக்ட் பண்றதே இல்லை. என்னமோ கண்மணியும், மைபிரெண்டும் ரொம்ப தொந்தரவு பண்ணாங்கன்னு ஒத்துட்டேன். அதுவும் நீ தான் என்னோட இருப்பேன்னு அந்த ரெண்டும் சொல்லவே இல்லை. எனக்கு இது எல்லாம் தேவையா.? Sorry..No chance..take me to Simla, அப்படீன்னு சொல்லீட்டு ரொம்ப மும்முரமா கைசூப்ப ஆரம்பிச்சுட்டா.

நான் - பாப்பா இது பாரு இன்னும் நீ கை சூப்பரதே நிறுத்தலை, இந்த ரேஞ்சல நீ விடற பந்தா உனக்கே ஓவரா தெரியலை?... இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள டீம் டிசைட் பண்ணனும். ப்ளீஸ் பாப்பான்னு கெஞ்சினேன்.


பாப்பா - ஹூம்..அதி எல்லாம் முலியாது போதி....அப்படீன்னு கை எடுக்காம மறுபடியும் திட்டுனா.

நான் உடனே கண்மணி அக்காக்கு ஃபோன் பண்ணி' அக்கா இந்த குட்டி சாத்தான் கிட்ட என்ன விட்டுட்டு நீங்க என்னடான்னா ஜாலியா பிளாக் தண்டர் சுத்தீட்டு இருக்கீங்களா. இது சரிப்பட்டு வராது. பேசாம இவள அடுத்த பிளைட்ல அனுப்பி வச்சர்ரேன், அஞ்சலி பாப்பாவ அனுப்பி வைங்கன்னு சொன்னேன்.
இத கேட்டுட்டு பாப்பா 'ஓ இவ நம்மள அனுப்பீட்டு தான் வேற வேலை பாப்பா போல இருக்கு' ன்னு பயந்துட்டு "ஏய் அவந்தி இங்க வா..சரி சரி ரொம்ப அழுவாத, போனா போகுது, இந்த ஒரு தடவை செலக்ட் பண்ணி தொலைக்கிறேன்' ன்னு பெரிய மனசு பண்ணா.

பாப்பா- ''யார் யார் எல்லாம் பேர் குடுத்து இருக்காங்க. இங்க பார் தில்லி சுத்தி பார்க்க வர்ர கேஸ் எல்லாம் நான் செலக்ட் பண்ண மாட்டேன்.''

நான் - ''சரி பாப்பா, இந்தா லிஸ்ட்''

லிஸ்ட் வாங்கி பார்த்துட்டு.." எனக்கு ரொம்ப தாகமா இருக்கு Coke Please!.. கோக் இருந்தா எனக்கு கூடவே Almonds chocalate and Cashew Biscuits இருக்கனும். So அது எல்லாம் ரெடி பண்ணு.. என்ன முழிக்குறே. போ போ பராக்கு பாக்காம சீக்கிறம் எடுத்துட்டு வா..கஷ்டகாலம் இதுக கிட்ட எல்லாம் நான் வந்து.. என் தலை எழுத்து" அப்படீன்னு கவுண்டமனி மாதிரி செம பந்தா.

இருடி மேட்ச் முடியட்டும் அப்புறம் இருக்கு உனக்குன்னு மனசுல நினச்சுட்டேன். இப்ப தான் தெரியுது எதுக்கு அபி அப்பா பாப்பாவ அனுப்பி வச்சார்னு. அவர் தப்பிக்கிறதுக்காக என்னை மாட்டி விட்டுட்டார்.

பாப்பா- சரி யாரு கேப்டன்

நான் - எல்லாரும் என்னை இருக்க சொல்றாங்க பாப்பா

பாப்பா- ஏய் ! என்ன நான் கேனச்சின்னு நினச்சுட்டியா, நீயே முடிவு பண்ணிப்பியா அது எல்லாம் முடியாது, நான் தான் கேப்டன்

நான் - அய்யோ பாப்பா நீ பேட் ஹைட் கூட இல்லை..நீ எப்படி..

பாப்பா- ஏய் அதிகமா பேசற நீ...அத பத்தி உனக்கு என்ன கவலை.

நான் - பாப்பா, இருந்தாலும் இது எல்லாம் ஓவர். என்ன இருந்தாலும் உன்னை விட நாங்க எல்லாம் பெரியவங்க. இப்படி எல்லாம் பேச கூடாது.

பாப்பா - பெரியவங்களா?....உங்களுக்கு இதுக்கெல்லாம் பத்தாதுன்னு தான என்ன டீம் செலக்ட் பண்ண உலக தமிழர்களெல்லாம் சேர்ந்து அனுப்பி வச்சு இருக்காங்க, என்ன?.. என்ன கூப்டு வச்சு இன்சல்ட் பண்றியா?..

கீழ விழுந்து கைய கால ஆட்டி ...ஆர்ப்பாட்டம் பண்ணி...எனக்கு இப்பவே அம்மாவ பார்க்கனும். அம்மா..அம்மா.. போன்ல அபி அம்மாவ கூப்டு கம்ப்ளெயின்ட் பண்ணா. அம்மா இந்த அவந்தி குரங்கு என்ன அடிக்குறா அம்மா..திட்டிட்டே இருக்காம்மா---அய்யோ அவ்வ்வ்வ்ளோ பெரிய பொய்!

அபி அம்மா, என்கிட்ட அவந்திம்மா..ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோடா...இன்னைக்கு தான் நிம்மதியா சீரியல் பார்க்குறேன். இந்த அபி அப்பாவ சமாளிக்குறதே எனக்கு பெரும்பாடா இருக்கு. ரெண்டும் சேர்ந்தா இந்த ஊர்ல இருந்து எங்களை துரத்தீறுவாங்க. ப்ளீஸ் குட்டி."
பாவமா இருந்துச்சு..நமக்கு ஒரு நாளைக்கே இப்படி இருந்தா. காலம் பூரா இவங்ககிட்ட இருக்குற அம்மா பாவம்னு நினச்சு சரி சமாளிக்கலாம்னு நினச்சேன்.

நான் - பாப்பா கேப்டனுக்கு பேட்டிங்க இல்லண்ணா பவுளிங்க ஆவது தெரிஞ்சு இருக்கனும். உனக்கு என்ன தெரியும்.

பாப்பா- எனக்கு பதில் பங்காளி அங்கிள் பேட் பண்ணுவார்.

நான் - அது எப்படி?... அவர் சான்ஸ் வரும்போது என்ன பண்ணுவார்

பாப்பா - ஏன் பை ரன்னர் இருக்கும்போது பை பேட்ஸ்மென் இருக்க கூடாதா?... அவர் ரெண்டு தடவை பேட் பண்ணுவார். அவ்ரே பேசாம இருக்கும் போது உனக்கு என்னடி?...இங்க பார் இதுக்கு மேல ஏதாவது பேசினேன்னா அப்புறம் நீ என்ன ரொம்ப அடிச்சேன்னு எல்லார்த்கும் போன்ல சொல்லீறுவேன் .
- தொடரும்

Monday, May 21, 2007

டீம் G.K.R.Nagar



காலனி கிரிக்கெட் டீம் பத்தி ரெண்டு பேர் எழுதினாங்க இல்ல...அத படிச்சதும் நான் எங்க காலனியில விளையாடின கேம் நியாபகம் வந்துடுச்சு.

பொண்ணுக யாரு கிரிக்கெட் விளையாட வருவா?. 8th படிக்கிறவரைக்கும் வந்து விளையாடினாங்க. அதுக்கு அப்புறம் அவங்க வீட்ல விடலை. ஆனா எங்க வீட்ல மாமா 'நீ போய் விளையாடு நான் இருக்கேன்னு" சொல்லி சப்போர்ட் பண்ணுவார்.

பசங்களோட தான் விளையாடனும். ஆனா பசங்க என்ன சேர்த்துக்க மாட்டாங்க. பொண்ணுகளுக்கெல்லாம் விளையாட தெரியாதுன்னு. ஆனா நான் அடம் பிடிச்சு எப்படியோ டீம்ல சேர்ந்துக்குவேன்.என் கஸின் யாதவ் வருவான். அவன் விளையாடுவானா, அவனோட சேர்ந்து நானும் உள்ள நுழஞ்சுறுவேன். (இல்லன்னா ஜூலிய அவுத்து விட்டுறுவேன்னு அவங்களுக்கு தெரியும்).

கொஞ்ச நாள் பெரிய பசங்களோட விளையாடீட்டு இருந்தேன். ஆனா சில நாள் கழிச்சு என்ன வெளியே அனுப்பறதுக்காக, 'யாதவ் சின்ன பையன் அவன சேர்த்துக்க முடியாது' ன்னு சொல்லிட்டாங்க. நான் சொல்றத கேக்கலை.

'பெரிய டீம்', போங்கடான்னு சொல்லி, சின்ன பசங்களை வச்சு நானே ரெண்டு கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணேன். சின்ன பசங்க தான நான் சொல்றத கேப்பாங்க.

நான் தான் ரெண்டு டீம்க்கும் கேப்டன்..;-), யார் ஜெயிச்சாலும் நானும் ஜெயிச்ச மாதிரி ஆகும் இல்ல..அதுக்கு தான்..;-))

ஒரு சோப்பளாங்கி பொண்ணு தான் அம்பயர். என்ன டிசிஷன் குடுக்கறதுக்கு முன்னாடி என்ன பார்த்துட்டு அப்புறம் தான் குடுக்கனும். நான் சிக்னல் குடுப்பேன்.

யார் எப்ப பேட் செய்வாங்க, எப்ப பவுள் செய்வாங்கன்னு நான் தான் டிசைட் பண்ணுவேன். சில சமயம் ப்ளேயெர்ஸ் எமர்ஜன்ஸி சேன்ஞ் கூட பண்ணுவேன். அது எல்லாம் கேக்க கூடாது.

ஒவ்வொரு பால் போட்டதற்கு அப்புறம் ரெண்டு பேட்ஸ்மென்னும் பேட்டால டச் பண்ணிட்டு சிரிக்கனும். (லூசே தான்). அப்படி டச் பண்ணலைன்னா அவங்கள வெளியே அனுப்பிறுவேன்.

கிரவுண்ட்ல கண்டிப்பா ஜூலி இருப்பா. என்ன யாராவது திட்டுனா அவங்கள பார்த்து கத்துவா இல்ல...அப்ப அவங்க பயந்துட்டு பேசாம இருந்துப்பாங்க.


அப்புறம் பால் தூறமா போய் விழுந்தா ஜூலிதான் எடுத்துட்டு வருவா. அவ எப்ப குடுக்கறாளோ அப்ப தான் விளையாட ஆரம்பிக்கனும். அவ கொஞ்ச நேரம் வச்சு விளையாடீட்டு தான் குடுப்பா.

பொண்ணுக தான் ஃபர்ஸ்ட் பேட்டிங்க். பொண்ணுக மட்டும் மூனு தடவை அவுட் ஆகலாம். நாங்க அவுட் ஆகறதுக்குள்ள இருட்டு ஆயிடும்.

கண்டிப்பா இன்னொரு டீம்ல இருக்கும் பெரிய பசங்களோட யாரும் பேசக் கூடாது. இதுல சிலருக்கு அவங்க அண்ணன் இருப்பாங்க அந்த டீம்ல. எனக்கு பயந்துட்டு எனக்கு முன்னாடி பேச மாட்டாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பசங்க நான் சொல்றத கேக்கலை. என்ன ஒரு டீம்க்கு தான் கேப்டன்னா இருக்கனும்னு சொல்லிட்டாங்க. சரி சின்ன பசங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்னு சரின்னு சொல்லிட்டேன்.

எங்க நகர்ல இருக்கும் சின்ன பொண்ணுகளையெல்லாம் டீம்ல சேர்த்துட்டேன். பசங்க திட்டுவாங்க. "டேய் நான் இல்லாட்டி நீங்க கிரிக்கெட் விளையாடி இருப்பீங்களா" ன்னு சொல்லி பந்தா விட்டு அடக்கீறுவேன். ஏதாவது பேசினா எங்களை எல்லாம் அடிச்சீங்கன்னு வீட்ல போய் சொல்லீறுவோம்னு பயமுறுத்தி வச்சோம். பொண்ணுக சொல்றது தான எல்லாரும் கேப்பாங்கன்னு ஒரு தைரியம் தான்.

இப்ப ஒரு வருஷம் ஆச்சு எங்க டீம்ல விளையாடி. ரொம்ப மிஸ் பண்றேன் எங்க டீம. ஆனா அதுக எல்லாம் ரொமப சந்தோஷமா இருக்காங்க. நானும் ஜூலியும் இல்லைன்னு.

Monday, May 14, 2007

டன்கன் ஃப்ளெட்சர் - கோச்

இங்கிலாந்து கோச் இருந்த டன்கன் ஃப்ளெட்சர், இப்ப வெஸ்ட் இண்டீஸ் டீம் க்கு கோச்சிங்க் பண்ணப் போறார். அவரும் க்லைவ் லாய்டும்.

Thatscricket Newsletter:

Lloyd endorsed Fletcher's credentials of being a hard task master for one of the toughest jobs in world cricket after Benett King put down his papers following the the Caribbean teams failure to progress into the Semi-finals.''If Duncan is interested then yes,'' said Lloyd. ''I think he still has a part to play in cricket in general. He is a strong man and strong character.

''There are some tough decisions to be taken. These guys have a total comfort zone and they have got to get out of that to get to the heights of other countries. We used to be very athletic and we have to get that work ethic back.''To bowl four or five spells a day you have to be fit and strong. If you look at our bowlers and then look at the likes of Garner and Croft, these guys today are midgets,'' he mockingly adds.Llyod said he is not the only one surprised at West Indies's decline.

''Everybody who speaks to me asks what is wrong with West Indian cricket because they got accustomed to us being professional and winning and they are not used to seeing us down at the bottom for so long. We are trying things but not the right things." Today West Indies will face a depleted Somerset side in a three-day match at Taunton. The tour game is the hosts' only fixture before the first Test at Lord's starting next Thursday.

Saturday, May 12, 2007

அமேஸிங் அம்மா...







Amazing, with a sunshine smile, shining eyes



with a pure heart



She is dear mother with noble heart


- Avanthika




Happy Mothers Day to all the mothers in தமிழ்மணம்



அம்மாவ்ங்க எல்லாம் ஆரோக்கியமா, சந்தோஷமா நல்லா இருக்கனும்



எல்லாரும் சேர்ந்து நம்ம அம்மாவ்ங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவோம்









Saturday, April 21, 2007

லாரா ஓ லாரா

ப்ரையன் லாராவோட கடைசி மாட்ச் இன்னைக்கு. அவர், ஒரு நாள் போட்டியில இருந்து ரிடையர்மென்ட் அறிவிச்சப்போ, யாருக்கும் நம்ப முடியலை. அந்த கிரவுன்டல இருந்தவுங்களுக்கு ஒன்னுமே புரியலையாம். ரொம்ப சாதாரனமா சொல்லீட்டு போயிட்டார்.



"I honestly feel that my game is over and we should give it to one of the younger players. It's really tough playing one-day internationals out there. After the World Cup the next one-day tournament for the West Indies is in June in England and I would love to sit back and watch and see the team do well," he said.


உலகக் கோப்பைல நல்லா விளையாடாததுக்கு, "All we can say is that we are sorry to our people' அப்படீன்னு சொல்லி மன்னிப்பு கேட்டார். "I think this is the end of my one-day career, for sure," . ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குவாலிட்டீஸ்ம் இருக்குற ஒரு நல்ல வீரர்.

1990ல பாக்கிஸ்தானுக்கு எதிரா கராட்சியில தான் இவரோட கேரியர் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் 297 ஒரு நாள் போட்டிகள் விளையாடியிருக்கிறார்.

Thank you and best wishes Lara

சீ...சீ..சீ..இந்த பழம் எல்லாம் புளிக்குது....

இந்த பாலம் படங்கள்ல வந்து இருக்காம்




இதன்னமோ பொம்மை மாதிரி இருக்கு

இந்த பாலத்துல போனா கரெக்டா போய் சேறுவாங்களா, கன்ஃபுயூஸ் ஆகாது?.. எந்த ரோட்ல வந்தோம், எதுல போகனும்னு, குழப்பம்ஸ் ஆகும்.:-))
















மேல இருக்குற இடத்துக்கு நம்ம எல்லாரும் பிக்னிக் போலாமா?..எப்படி இருக்கும்...














சீ...சீ..சீ..இந்த பழம் எல்லாம் புளிக்குது....


இது எல்லாம் ஜப்பான்ல இருக்குற பாலங்கள்

Friday, April 20, 2007

ஸென் கதை-7

ஒரு வயசான விவசாயி ஒருத்தர், வயசான காரணத்தினால ஒன்னும் பண்ண முடியாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருந்தாராம். வயல்ல வேலை செய்ய முடியாம ஒரே இடத்துல உட்க்கார்ந்து இருந்தார். அவர பார்த்து அவர் மகனுக்கு கோவம் கோவமா வந்துச்சாம். "என்ன இந்த கிழவன் ஒரு வேலையும் பண்ண மாட்டெங்குறான். ஏதாவது செஞ்சு இவர அனுப்பனும்' னு முடிவு பண்ணான்

அடுத்த நாள் ஒரு காஃபின் தயார் பண்ணி எடுத்துட்டு வந்து அதுல அவங்க அப்பாவ படுத்துக்க சொன்னான். அவரும் உள்ள படுத்துட்டார். அப்புறம் ஒரு மலை உச்சிக்கு எடுத்துட்டு போய் கீழே உருட்டி விட ஐடியா பண்ணான்.

கீழ தள்ளப் போறப்போ, உள்ள இருந்த பெரியவர், காஃபின் மூடிய தட்டுனாராம். சரி சாகப்போறப்போ அப்பா என்ன சொல்றார்னு கேப்போம்னு மூடிய திறந்தானாம் மகன்.

பெரியவர் சொன்னாராம், " என்னை நீ கீழே தள்ளி உருட்டி விட போறேன்னு தெரியும். எப்படி இருந்தாலும் நான் சாகத்தான் போறேன். அதுக்கு எதுக்கு இந்த காஃபின் வேஸ்ட் பண்ற. எடுத்து வச்சா, நாளைக்கு உன் குழந்தைகள் வேற வாங்க வேண்டியது இல்லைன்னு" சொன்னாராம்.

Moral of the Story

யாராயிருந்தாலும் இந்த உலகத்துல இருக்குறதுக்கு ஒரு காரணம் இருக்கும்

அந்த காரணம் வெளியே தெரியா விட்டாலும்

Wednesday, April 18, 2007

வெற்றி - ஸென் கதை 6


ஒரு ஊர்ல ஒரு வயதான போர் வீரர் ஒருத்தர் இருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். வயசான அப்புறமும் எதிரிகளை வென்று வந்திருக்கிறார். அவர்கிட்ட தோல்வி அப்படீங்கறதே இல்லை. அவர் கிட்ட பலர் வந்து கத்துகிட்டாங்களாம்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஒரு சின்ன வயசு போர் வீரர் வந்தான். அவன் இந்த பெரியவர பத்தி கேள்வி பட்டு அவர எப்படியாவது தோர்க்கடிக்கனும்னு முடிவு பண்ணி சண்டைக்கு கூப்டானாம். இந்த இளம் வீரன் கிட்ட என்ன ஒரு பலம்னா, எதிரியோட வீக்னஸ் தெரிஞ்சு, அதையே இவனுக்கு பலமாக்கி தாக்குவான். இதுல இவன மிஞ்சறதுக்கு ஆள் இல்லை. எதிரிய முதல தாக்க விட்டுட்டு அப்புறம் தான் இவன் தாக்குவான்.

அதே மாதிரி இந்த வயதான வீரர் கிட்ட சண்டைய ஆரம்பிச்சான். பெரியவர் வந்து பேசாம அவன் முன்னாடி நின்னுட்டார். இவன் அவர் மேல மண் எடுத்து வீசினான். வாய்க்கு வந்த படி திட்டினான். முதல்ல அவர் அடிக்கட்டும்னு இத்தனையும் செஞ்சு இருக்கான். ஆனால் பெரியவர் ஒன்னும் அசையவே இல்லை. கடைசியில இவனே சோர்ந்து போய், முடியாம போயிட்டானாம்.

பெரியவர் கிட்ட படிக்குற மாணவர்கள் வந்து, "சார் என்ன நீங்க, அவன் அப்படி பேசி, அவமானப் படுத்தீட்டு போறான், நீங்க பேசாம இருக்கீங்க" அப்படின்னு கேட்டு இருக்காங்க.

அதுக்கு பெரியவர் சொன்னாராம், "ஒருவர் நமக்கு ஏதாவது பரிசு கொடுக்க வர்ரப்போ, நம்ம வேண்டாம்னு சொல்லிட்டா, அப்புறம் அந்த பரிசுக்கு யாருக்கு சொந்தம்னு?" கேட்டாராம்.
"To win without violence is the greatest victory!"

Saturday, April 7, 2007

இன்னைக்கு நடந்த BCCI மீட்டிங்


ஒரு வழியா BCCI சில அதிரடி மாற்றங்களை செஞ்சிறுக்கு. திராவிட் தான் அடுத்த மூனு டூருக்கும் கேப்டன். பீல்டிங் கோட்சா ராபின் சிங்கும், பெளலிங் கோட்சா வெங்கடேஷ் பிராசாத்தும் இருப்பாங்க. ரவி சாஸ்திரி தான் மேனேஜர் பங்களாதேஷ் டூருக்கு.

முக்கியமா வீரர்களுக்கு குடுக்குற ஃபீஸ் தான் இப்ப எல்லாருக்கு ஒரே மாதிரி பண்ணிட்டாங்க. ஜெயிச்சா incentive தருவாங்களாம்.

மேட்ச்சுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடில இருந்து அட்வர்டைஸ்மென்ட் ஷூட் பண்றதுக்கு அனுமதி இல்லை. அதுவும் வருஷத்துக்கு மூனு தானாம். (அண்ணனுகளுக்கெல்லாம் இப்ப எப்படி இருக்கும்..:-0)

எடுத்த முடிவுகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது டொமஸ்டிக் கிரிக்கெட் இனி அதிகமா ஆடுவாங்க. அதுவும் under 19 மாட்ச் இனி அதிகமா நடக்குமாம்.கண்டிப்பா எல்லாரும் குறிப்பிட்ட அளவு டொமஸ்டிக் கிரிக்கெட் ஆடனும். எல்லா ஸ்டேட் அசோசியேசன்சும் 'fast and lively" wickets தயார் பண்ண சொல்லி போர்ட் சொல்லி இருக்கு.

அவங்க எடுத்த முடிவுகள்

  • Rahul Dravid to captain team for next three tours
  • Performance based payment structure
  • Players can do a maximum of 3 endorsements
  • Ravi Shastri appointed Cricket Manager, Venkatesh Prasad as bowling coach, Robin Singh as fielding coach for Bangladesh tour
  • The frequency of under-19 tours will be increased
  • All state associations to have academies to develop young talent by April 2009
  • Cricket advisory committee set up with Sharad Pawar as its head and including seven former captains who attended Friday's meeting

ஸென் கதையில் அழகு

என்னை தம்பி [ ஹை... ஒரு தம்பி இங்க, தம்பி அண்ணான்னா நல்லா இல்ல :-)] 'அழகு' விளையாட்டுக்கு கூப்டு இருந்தார். எனக்கு அவ்வளவு எல்லாம் எழுத தெரியாது. அதனால இந்த கதையிலேயெ சொல்லிட்டேன். தேங்க்ஸ் அண்ணா.

ஒரு அழகான கார்டன். அத பார்த்துக்குறதுக்கு, பூ, செடி, கொடியில எல்லாம் ரொம்ப ஆர்வமா இருந்த ஒரு ப்ரீஸ்ட் வேலைக்கு வச்சாங்களாம். அவரும் கார்டன ரொம்ப நல்லா பார்த்துட்டார். எப்பவும் கார்ட்ன்லயெ இருந்து, குப்பையெல்லாம் கூட்டி, ஒரு இலை விழுந்தாகூட அத கூட்டி சுத்தம் பண்ணீடுவார். ஒரு நாள் அந்த கார்டனுக்கு ஒரு விருந்தாளி ஒருத்தர் வர்ரதா சொன்னாங்களாம். இவர் உடனே கார்டன இன்னும் அழகா செய்யனும்னு, வெளியே நீட்டீட்டு இருந்த கொடி எல்லாம் கத்திருச்சு, செடி எல்லாம் நல்லா கட்டி, தண்ணி எல்லாம் ஊத்தி கழுவி ரொம்ப சுத்தமா வச்சுட்டார்.

இந்த கார்டனுக்கு பக்கத்துல ஒரு ஸென் மாஸ்டர், வயசானவர் இருக்கார். அவருக்கு எப்பவும் இந்த பூசாரி வேலை செய்யறத ஆர்வமா பார்த்து சந்தோஷப்படுவார். அன்னைக்கும் அப்படித்தான் இவர் சுத்தம் செய்யறத பார்த்துட்டே இருந்து இருக்கார். வேலையெல்லாம் முடிச்சுட்டு ஸென் மாஸ்டர பார்த்து "எப்படி, இன்னைக்கு கார்டன் ரொம்ப நல்லா இருக்கு இல்ல..ஒரு இலை கூட கீழ இல்ல பாருங்க, செடி எல்லாம் கட் பண்ணி, அழகா வச்சிறுக்கேன்" என்று சொன்னாராம். அதுக்கு அந்த மாஸ்ட்ர் ''ஆமா இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கு, ஆனா ஒரெ ஒரு குறை மட்டும் இருக்கு என்ன உள்ளே விட்டா நான் அத சரி செஞ்சுறுவே''ன்னு சொன்னாராம். மனசில்லாம பூசாரியும் மாஸ்டர உள்ளே விட்டார். மாஸ்டர் உள்ளே வந்து ஒரு மரக்கிளைய பிடிச்சு உலுக்கி, இலையெல்லாம் கீழே விழ வைச்சாராம். இருக்கமா கட்டி வச்சுறுக்கிற செடிய லூஸ் பண்ணி விட்டாராம். கட்டு லூஸ் ஆனதுனால, செடி பூ எல்லாம் காத்துக்கு ஆடி அழகா இருந்துச்சு. கீழே விழுந்து இருந்த இலைகளும் கலர் கலரா அழகா இருந்துச்சாம்.

"இப்ப பாருங்க, இது இன்னும் அழகா இருக்கு இல்ல" அப்படீன்னு கேட்டாராம். அதுக்கு அப்புறம் தான் பூசாரிக்கு தெரிஞ்சது, அழகுன்னா என்னன்னு. நான் ரொம்ப சிறமப்பட்டு செயற்கைய உருவாக்கீட்டு இருந்தேன், இலவசமா இயற்கை இத்தன அழகா இருக்கும் போதுன்னு சொன்னாராம்.

அப்புறம் அழகு பத்தி சொல்றப்போ, என் ஜூலி பத்தி சொல்லலைனா, அது டென்ஷனாயிடும். பாருங்க இது தான் என்னோட ஜூலி (டேஷான்ட்). குட்டியில எடுத்தது.




இப்போ அதுக்கு 7 வயசு ஆச்சு. ரொம்ப அழகா இருக்கும். அடிக்கடி சண்டை போட்டுப்போம், ஆனா அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை, எனக்கும் அத விட்டா வேற வழி இல்லை. அதனால சிக்கிரம் பேசீடுவோம்.


அப்பப்போ ரொம்ப புத்திசாலின்னு நினப்பு வந்துடும் அதுக்கு. இல்லாத பந்தா எல்லாம் பண்ணும். அப்பதான் எனக்கு டென்ஷன் ஆகும். அதுவும் இங்க வந்தப்புறம், இங்க இருக்குற ஆளுக மாதிரியே இதுவும் கொஞ்சம் 'ஒரு மாதிரி' ஆயுட்டு வருது. ஆனா அது என்ன பண்ணாலும் அழகு தான். நைட்ல நாங்க எல்லாம் தூங்கின அப்புறம் கத்தும். அப்புறம் அம்மா ''ஹே.. ஜூலி பேசாம தூங்கு''ன்னு சொல்லனும்.. அப்பதான் அது தூங்கும்.. இது டெய்லி நடக்கும். அதுவும் அதுக்கு தெலுங்குல சொன்னாதான் புரியும்.... :-))).

இது தான் என்னோட அழகு பதிவு. நல்லா இருக்கா?
Locations of visitors to this page