ஒரு ஊர்ல ஒரு வயதான போர் வீரர் ஒருத்தர் இருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். வயசான அப்புறமும் எதிரிகளை வென்று வந்திருக்கிறார். அவர்கிட்ட தோல்வி அப்படீங்கறதே இல்லை. அவர் கிட்ட பலர் வந்து கத்துகிட்டாங்களாம்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஒரு சின்ன வயசு போர் வீரர் வந்தான். அவன் இந்த பெரியவர பத்தி கேள்வி பட்டு அவர எப்படியாவது தோர்க்கடிக்கனும்னு முடிவு பண்ணி சண்டைக்கு கூப்டானாம். இந்த இளம் வீரன் கிட்ட என்ன ஒரு பலம்னா, எதிரியோட வீக்னஸ் தெரிஞ்சு, அதையே இவனுக்கு பலமாக்கி தாக்குவான். இதுல இவன மிஞ்சறதுக்கு ஆள் இல்லை. எதிரிய முதல தாக்க விட்டுட்டு அப்புறம் தான் இவன் தாக்குவான்.
அதே மாதிரி இந்த வயதான வீரர் கிட்ட சண்டைய ஆரம்பிச்சான். பெரியவர் வந்து பேசாம அவன் முன்னாடி நின்னுட்டார். இவன் அவர் மேல மண் எடுத்து வீசினான். வாய்க்கு வந்த படி திட்டினான். முதல்ல அவர் அடிக்கட்டும்னு இத்தனையும் செஞ்சு இருக்கான். ஆனால் பெரியவர் ஒன்னும் அசையவே இல்லை. கடைசியில இவனே சோர்ந்து போய், முடியாம போயிட்டானாம்.
பெரியவர் கிட்ட படிக்குற மாணவர்கள் வந்து, "சார் என்ன நீங்க, அவன் அப்படி பேசி, அவமானப் படுத்தீட்டு போறான், நீங்க பேசாம இருக்கீங்க" அப்படின்னு கேட்டு இருக்காங்க.
அதுக்கு பெரியவர் சொன்னாராம், "ஒருவர் நமக்கு ஏதாவது பரிசு கொடுக்க வர்ரப்போ, நம்ம வேண்டாம்னு சொல்லிட்டா, அப்புறம் அந்த பரிசுக்கு யாருக்கு சொந்தம்னு?" கேட்டாராம்.
"To win without violence is the greatest victory!"