Wednesday, April 4, 2007

கிரிகெட்டை தடை செய்த கிராமங்கள்



உலக்கோப்பைல இருந்து இந்தியா வெளியே வந்ததுக்கு அப்புறம் ஹரியானா மாநிலத்தில 28 கிராமங்கள் கிரிக்கெட்ட தட செஞ்சிறுச்சாம். கபில்தேவ் மாதிரி பெரிய பெரிய கிரிக்கெட்டர்ஸ் எல்லாம் ஹரியானால இருந்து தான வந்தாங்க. ஆனா இப்ப இந்தியா மோசமா விளையாடினதுனால மனசு ஒடிஞ்சு போய், இனிமேல் ஹாக்கி, கபடி, புட்பால், வாலிபால், ரெஸ்ட்லிங் போன்ற விளையாடுக்கள் நாங்க ப்ரமோட் பண்ணப்போரோம்னு சொல்லி இருக்காங்க. அது மீறி கிரிக்கெட் விளையாடினா, சினிமால வர்ரமாதிரி ஊர விட்டு ஒதுக்கி வச்சுருவாங்களாம்....:-)). இந்த செய்திய தேவா சிங் அப்பட்டீன்னு ஒரு பஞ்சாயத்து தலைவர் சொல்லி இருக்கார்.

''நாட்டாமை, தீர்ப்ப மாத்துன்னு'' யாராவது சொல்லப்போறாங்க இப்ப..:-))


13 comments:

said...

அந்த நாட்டு ஆமைய மாத்து:-))

said...

நாட்டாமை பேரை மாத்து:-))

said...

:-)))

மாத்திட்டேன்..

said...

குட், நல்ல பிள்ளை:-))

said...

குளத்தோடு கோவிச்சிக்கிட்டு ........... போன கதையா இருக்கு.

said...

fast bowler..

இந்த மாதிரி Einstein மூளை North India ல போல இருக்கு

said...

கொடுமை

said...

அவந்திகா! "தம்பி" tag செய்திருக்கார், பார்க்கவும்
http://umakathir.blogspot.com/2007/04/blog-post.html

said...

அய்யோ..நான் என்ன எழுத...

said...

/இனிமேல் ஹாக்கி, கபடி, புட்பால், வாலிபால், ரெஸ்ட்லிங் போன்ற விளையாடுக்கள் நாங்க ப்ரமோட் பண்ணப்போரோம்னு சொல்லி இருக்காங்க./

நல்ல விசயம்தான, தங்கச்சி!

/அய்யோ..நான் என்ன எழுத...
/
என்னங்க... உங்க பேரே அழகுதான...
ஆறு பந்துலயும் ஆறு அடிக்குறது... உங்களுக்கு அல்வா sorry... icecream சாப்பிடுறமாதிரிதான ...;)

said...

//என்னங்க... உங்க பேரே அழகுதான...
ஆறு பந்துலயும் ஆறு அடிக்குறது... உங்களுக்கு அல்வா sorry... icecream சாப்பிடுறமாதிரிதான ...;) //

தேங்ஸ் அண்ணா.. ஆனா அழகு பத்தி எழுதறதுக்கு எல்லாம் பத்தாது.. பார்க்கலாம்..

said...

இதையே ஏன் சட்டமாக்கக்கூடாது? மற்ற விளையாட்டுக்களையும் சற்று கவனிக்கலாமே. கிரிக்கெட் என்ற ஆமையை முதலில் துரத்தினால் தான் நம் நாடு மற்ற விளையாட்டுகளில் முன்னேற முடியும் போலத் தெரிகிறது.
மற்ற விளையாட்டுக்களில் நம்மவர்கள் என்ன கிழித்துவிட்டார்கள் என்று கேட்கலாம் - எப்படியும் தோற்பது உறுதியாகிவிட்ட நிலையில் இவர்களுக்கு பல கோடிகளைக் கொட்டிக்கொடுப்பதற்கு மற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். பதினொரு பேர்களுக்குப் பதில் பல நூறு பேர் பிழைப்பார்கள்.

said...

FloraiPuyal
என்ன இவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க
ஒரு ஸ்போர்ட் ப்ரமோட் பண்றதுக்கு எத்தன கஷ்டப்படனும். எந்த அளவுக்கு கிரிக்கெட்டுக்கு செலவு செஞ்சு இருப்பாங்க... இப்ப மோசமா விளையடுறாங்கன்னு உடனே அந்த ஸ்போர்ட் வேண்டாம்னு சொல்லமுடியுமா.. அத சரி பண்றதுக்கு என்ன பண்ணனுமோ அது தான யோசிக்கனும்.. நல்லா விளையாடுறவுங்க சான்ஸ் இல்லாம எத்தன பேர் இருப்பாங்க.. ஸ்போர்ட்ட ஒரு ஸ்போர்ட்டாதான் பார்க்கனும்.. அது எந்த ஸ்போர்டா இருந்தாலும்...மத்த ஸ்போர்ட்ஸ்க்கும் இம்பார்டென்ஸ் குடுக்கனும்னு சொல்லுங்க.. :-)

Locations of visitors to this page